என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கைத்தறி தினம்"
- 9வது தேசிய கைத்தறி தின விழாவை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் உள்ள வி.ஐ.பி மஹாலில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கைத்தறி கண்காட்சி நடைபெறவுள்ளது.
- இந்நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
திண்டுக்கல்:
சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் தேசிய கைத்தறி தின விழா 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று நாடு முழுவதும் கொ ண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், கைத்தறித்துறை சார்பில் இந்த ஆண்டு நாளை (7ந் தேதி) 9வது தேசிய கைத்தறி தின விழாவை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் உள்ள வி.ஐ.பி மஹாலில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கைத்தறி கண்காட்சி நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், வாழை நார் பட்டு சேலைகள், பம்பர் காட்டன் சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப் படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேபோல், நாகல்நகர் பகுதியில் உள்ள செந்தா மஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த வாய்ப்பை நெச வாளர்கள் பயன்படுத்தி க்கொள்ள வேண்டும், என மாவ ட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவி த்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்